நாளை குப்பிளானில் முதல்தடவையாக உருளைக்கிழங்கு அறுவடை வயல்விழா VIDEO

ஆசிரியர் - Admin
நாளை குப்பிளானில் முதல்தடவையாக உருளைக்கிழங்கு அறுவடை வயல்விழா VIDEO

யாழ். மாவட்ட உருளைக்கிழங்கு உற்பத்தி விற்பனையாளர் கூட்டுறவுச் சமாசத்தின் ஏற்பாட்டில் உருளைக்கிழங்கு அறுவடை வயல்விழா நாளை ஞாயிற்றுக்கிழமை(25) காலை-09 மணி முதல் முதல்தடவையாக குப்பிளான் விவசாயிகள் விளைநிலத்தில் இடம்பெறவுள்ளது.

யாழ்.மாவட்ட உருளைக்கிழங்கு உற்பத்தி விற்பனையாளர் கூட்டுறவுச் சமாசத் தலைவர் இ.தெய்வேந்திரம் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த விழாவில் யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் பிரதம விருந்தினராகவும், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்  நா.வேதநாயகன் சிறப்புவிருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.

வடமாகாண விவசாயத் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் சி.சிவகுமார், இரணைமடு பிராந்திய ஆராய்ச்சி நிலைய மேலதிகப் பணிப்பாளர் கலாநிதி சி.ஜே. அரசகேசரி உள்ளிட்ட பல பிரமுகர்கள் கெளரவ விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த விழாவில் யாழ்.மாவட்டத்திலுள்ள அனைத்து விவசாயப் பெருமக்களையும், உருளைக்கிழங்குச் செய்கையாளர்களையும் கலந்து சிறப்பிக்குமாறு விழா ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

விழா ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியடைந்துள்ளதுடன் இது தொடர்பில் இன்றைய தினம் இரவு வலிகாமம் பகுதியில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்புச் செய்யப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு