தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தேர்தல் பிரச்சார கூட்டம் உடுத்துறையில் நடைபெற்றது
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தேர்தல் பிரச்சார கூட்டம் உடுத்துறையில் இன்று (16) மாலை நடைபெற்றது.
இதன் போது கட்சியின் தலைவர், முன்னாள் முதல்வர், நீதியரசர் சீ .வீ விக்கினேஸ்வரன் அவர்களோடு யாழ்மாவட்ட வேட்பாளர்கள் சுரேஸ் பிரேமச்சந்திரன், ஸ்ரீகாந்தா, சிவாஜிலிங்கம், மீரா அருள்நேசன், அனந்தி சசிதரன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.
மிக எளிமையான முறையில் ஒழுங்கமைக்கப்பட்ட இக்கூட்டத்தில் கணிசமான மக்கள் கலந்து கொண்டர். அதிகமாக இளைஞர்களே உடுத்துறை தேர்தல் பிரச்சாரச் கூட்டத்திலும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.