கட்டுநாயக்க விமான நிலைய வி.ஐ.பி முனையத்திற்கு அருகில் விமானப்படை சிப்பாயின் துப்பாக்கி இயங்கியதால் பரபரப்பு..

ஆசிரியர் - Editor I
கட்டுநாயக்க விமான நிலைய வி.ஐ.பி முனையத்திற்கு அருகில் விமானப்படை சிப்பாயின் துப்பாக்கி இயங்கியதால் பரபரப்பு..

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வி.ஐ.பி. முனையத்திற்கு அருகில் கடமையிலிருந்த விமானப்படை வீரர் ஒருவரின் துப்பாக்கி தற்செயலாக வெடித்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை (30) காலை இந்த சம்பவம் இடம்பெற்றதையடுத்து எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார். விமானப்படை வீரர் ஓய்வெடுப்பதற்காக ஓய்வு அறைக்கு சென்றதாகவும் அவரது துப்பாக்கி தரையில் விழுந்து வெடித்ததில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் முனைய சுவர் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு