தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பறக்கவிட்ட சிவப்பு-மஞ்சள் கொடி?
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் வேண்டுகோளை ஏற்று இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் சிவப்பு மஞ்சள் கொடி கட்டப்பட்டுள்ளது.
கடந்த ஒருவருட காலமாக போராட்டத்தினில் குதித்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்கள் தமது கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சிவப்பு மஞ்சள் கொடிகளை பறக்கவிட கோரிக்கையினை விடுத்திருந்தனர்.
அவர்களது கோரிக்கையின் பேரில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையகம் அமைந்துள்ள மணல்தறை வீதி காரியாலயத்தில் சிவப்பு மஞ்சள் கொடி இன்று பறக்கவிடப்பட்டிருந்தது.