ஏழாலை,குப்பிளான்,புன்னாலைக்கட்டுவன் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்தடை

ஆசிரியர் - Admin
ஏழாலை,குப்பிளான்,புன்னாலைக்கட்டுவன் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்தடை

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வடமாகாணத்தின் யாழ். மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை சனிக்கிழமை(24) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்பிரகாரம், நாளை காலை-08.30 மணி முதல் மாலை-05.30 மணி வரை யாழ். மாவட்டத்தின் ஏழாலை, குப்பிளான், புன்னாலைக்கட்டுவன், புன்னாலைக்கட்டுவன் வடக்கு விக்கிரமரட்ண பிறேவேற் லிமிற்டெட், கட்டுவன், ஊரெழு, குரும்பசிட்டி, வசாவிளான்,சுன்னாகம் சிவன் கோவிலடிப் பிரதேசம், சூராவத்தை, மயிலங்காடு,  சுன்னாகம் இலங்கைத் தொலைத்தொடர்பு நிலையம், தம்பாட்டி, நாரந்தனை வடக்கு, கோண்டாவில் கே.கே.எஸ். வீதி, முத்தட்டுமடம், பாரதி வீதி, துரை வீதி, உப்புமடம் சந்தி ஆகிய பகுதிகளில் இந்த மின்தடை அமுலிலிருக்குமெனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு