கச்சதீவு செல்ல போதிய படகுகள் இல்லை! - பக்தர்கள் அவதி

ஆசிரியர் - Admin
கச்சதீவு செல்ல போதிய படகுகள் இல்லை! - பக்தர்கள் அவதி

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்திற்கு செல்வதற்காக குறிகாட்டுவான் துறையில் போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாமையால் மக்கள் பெரும் சிரமத்தை எதிர் நோக்கினர். 

பெருமளவான பக்தர்கள் இம்முறை கச்சதீவுக்கு செல்வதற்காக இறங்கு துறைக்கு சென்ற நிலையில் அங்கு போதிய படகுகள் காணப்படவில்லை.

இதனால் மிக நீண்ட நேரம் அங்கு மக்கள் காத்திருந்த நிலையில் அவர்கள் அனைவரையும் கடற்படையினர் மீள காங்கேசன்துறைக்கு அழைத்து சென்றுள்ளனர். 

காங்கேசன்துறையில் இருந்து கடற்படையின் கப்பலில் இம் மக்களை கச்சதீவுக்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுத்துள்ளதாக அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். 

சுமார் 300 பக்தர்கள் இவ்வாறு கடற்படையினரால் காங்கேசன்துறைக்கு பேரூந்துகளில் அழைத்து செல்லப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு