யாழில் தாயின் பெரும்தொகைப் பணத்தினைத் திருடிய இளைஞனுக்கு நீதவானின் உத்தரவு

ஆசிரியர் - Admin
யாழில் தாயின் பெரும்தொகைப் பணத்தினைத் திருடிய இளைஞனுக்கு நீதவானின் உத்தரவு

தனது தாயின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து 90 ஆயிரம் ரூபா பணத்தினைத் திருடிய  இளைஞனை எதிர்வரும்- 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் ஏ. யூட்சன் இன்று(22) உத்தரவிட்டுள்ளார்.

திருமணம் செய்து புத்தூர் கிழக்குப் பகுதியில் வாழ்ந்து வரும் குறித்த இளைஞன் தாய் இல்லாத நேரம் வீட்டுக்குள் நுழைந்து அவரின் 90 ஆயிரம் ரூபா பணத்தினைத் திருடியிருந்தார்.

இது தொடர்பாகத் தாயார் அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கமைய திருடிய மகனைக் கைது செய்திருந்தனர். 

இந்நிலையில் சந்தேகநபர் இன்றைய தினம் மல்லாகம் நீதிமன்ற நீதவான் ஏ. யூட்சன் முன்னிலையில் முற்படுத்தப்பட்டார். இதன்போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.  

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு