பெற்றோலை மண்ணெண்ணெய் என நினைத்து அடுப்பிற்குள் ஊற்றிய யாழ். குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி

ஆசிரியர் - Admin
பெற்றோலை மண்ணெண்ணெய் என நினைத்து அடுப்பிற்குள் ஊற்றிய யாழ். குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி

மகள் வாங்கி வைத்திருந்த பெற்றோலினை மண்ணெண்ணெய் என நினைத்து அடுப்பிற்குள் ஊற்றிய குடும்பஸ்தர் முகத்தில் தீக்காயங்களுக்கு இலக்காகிக் கடந்த ஒருவாரகாலமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வீட்டில் ஒருவருமில்லாத சமயம் குறித்த குடும்பஸ்தர் தேநீர் குடிக்கும் நோக்குடன் தனது மகள் வாங்கி வைத்திருந்த பெற்றோலை மண்ணெண்ணெய் என நினைத்து அடுப்பிற்குள் ஊற்றியுள்ளார். இதனால், முகத்தில் திடீரெனத் தீப்பற்றிக் கொண்டுள்ளது. தீப்பரவலால் குறித்த குடும்பஸ்தர் கடும் அவதிப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மனைவி அருகிலுள்ள வர்த்தகநிலையமொன்றுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய போது கணவர் தீயில் எரிவதைக் கண்ணுற்று அதிர்ச்சியடைந்த நிலையில் கணவரைக் காப்பாற்ற முயற்சித்துள்ளார். கணவரை இழுத்துச் சென்று தண்ணீர்த் தொட்டிக்குள் போட்டுள்ளார்.

தீ கட்டுப்பட்டதும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காகச் சேர்ப்பித்துள்ளார்.

யாழ்.சுதுமலை தெற்கைச் சேர்ந்த 59 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு