யாழில் வெற்றிலை மென்றவாறு மீன் விற்பனை செய்த பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

ஆசிரியர் - Admin
யாழில் வெற்றிலை மென்றவாறு மீன் விற்பனை செய்த பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

யாழ். ஊர்காவற்துறை மீன்சந்தையில் வெற்றிலை மென்றவாறு மீன் விற்பனை செய்த பெண்ணுக்கு மூவாயிரம் ரூபா அபராதம் விதித்து ஊர்காவற்துறை நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் இன்றைய தினம்(21) உத்தரவிட்டுள்ளார்.


இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் குறித்த பகுதிப் பொதுச்சுகாதரப் பரிசோதகர் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.


விசாரணையின் போது குறித்த பெண் வெற்றிலை மென்றவாறு மீன் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து மேற்படி பெண்ணுக்கு மூவாயிரம் ரூபாவை அபராதமாக விதித்து நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் உத்தரவு பிறப்பித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு