முக கவசம் அணியாவிட்டால் 14 நாட்கள் தனிமைப்படுத்தல்..! நாளை அமுலுக்கு வருகிறது இறுக்கமான நடைமுறை, பொலிஸார் எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I
முக கவசம் அணியாவிட்டால் 14 நாட்கள் தனிமைப்படுத்தல்..! நாளை அமுலுக்கு வருகிறது இறுக்கமான நடைமுறை, பொலிஸார் எச்சரிக்கை..

இலங்கையில் நாளை தொடக்கம் இறுக்கமான நடவடிக்கைகள் அமுல்படுத்தப்படவுள்ளது. இதன்படி முக கவசம் அணியாமல் நடமாடினால் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என பொலிஸார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர். 

நேற்றய தினம்  பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண ஊடகங்களை சந்திக்கும்போது கொரோனா அபாயம் இன்னும் முற்றாக நீங்கவில்லை. ஆகவே சுகாதார நடைமுறைகளை பேணாதவர்கள் கைது செய்யப்படுவார்கள்

என கூறியிருந்தார். இந்நிலையில் முககவசம் அணியாதவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பொலிஸார். எச்சரித்துள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு