முகமாலையில் படையினரின் துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த இளைஞன் பலி..! இளைஞர்கள் கூடியதால் பதற்றம், ஆயதம் தாங்கிய பொலிஸார் குவிப்பு..

ஆசிரியர் - Editor I

கிளிநொச்சி- முகமாலை பகுதியில் மணல் கொண்டு சென்ற வாகனம் மீது படையினர் நடாத்திய துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் உயிரிழந்துள்ளான். 

சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு 1 மணி நேரத்திற்கும் மேலாக வைத்தியசாலையில் மருத்துவர் இல்லாமையால் காத்திருக்க நேர்ந்தது. இந்நிலையில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவர் பளை- கெற்பெலி பகுதியை சேர்ந்தவர் என கூறப்படுகின்றது. தற்போது பளை வைத்தியசாலை வளாகத்தில் பொதுமக்கள் கூடியுள்ளதால் பதற்றமான நிலை ஏற்பட்டிருப்பதாக அங்குள்ள எமது செய்தியாளர் கூறியுள்ளார். 

எனினும் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் கூறியுள்ளார். 

2ம் இணைப்பு..

பளை, கெற்பலியைச் சேர்ந்த திரவியம் இராமலிங்கம் (வயது -24) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். முகமாலை பகுதியில் சட்டத்துக்கு புறம்பாக மணல் அகழ்வில் ஈடுபட்ட போது 

இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் உயிரிழந்தார் என்று பளை பொலிஸார் தெரிவித்தனர்.



பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு