வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளராக சேமசுந்தரம் சுகிர்தன் தெரிவு

ஆசிரியர் - Admin
வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளராக சேமசுந்தரம் சுகிர்தன் தெரிவு

வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளராக முன்னாள் தவிசாளர் சேமசுந்தரம் சுகிர்தன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.


வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கான உள்ளூராட்சி தேர்தலின்போது 17 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.


இதனடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குறித்த பிரதேச சபையில் வெற்றியீட்டியவர்களுக்கான கலந்துரையாடல் அண்மையில் நடைபெற்றபோது வலி வடக்கு பிரதேச சபையின் தவிசாளராக சோமசுந்தரம் சுகிர்தன் உப தவிசாளராக பொன்னம்பலம் இராசேந்திரம் தெரிவு செய்யப்பட்டனர்.


இச் சபையின் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களாக பாக்கியநாதர் மரியதாஸ், செல்லத்துரை கமலநாதன், ஐயாத்துரை மயூரன், டானியல் அந்தோனிப்பிள்ளை, திருமதி மேரி சகாயராணி சுவேந்திராஜா, சரவணமுத்து தனபால சிங்கம், சேனாதிராசா கலை அமுதன், சண்முகலிங்கம் சஜீவன், செல்வக்குமாரன் விஜயராஜ், சிவபாலசுந்தரம் கரிகரன், பசுபதி யேகராஜா, பொன்னுத்துரை தங்கராஜா, கந்தையா ஜீனதாஸ், கந்தசாமி மயூரன், சொக்கலிங்கம் சபேசன் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு