வலிகாமம் தென்மேற்குப் பிரதேச சபையின் தவிசாளராக அந்தோனிப்பிள்ளை ஜெபநேசன் தெரிவு

ஆசிரியர் - Admin
வலிகாமம் தென்மேற்குப் பிரதேச சபையின் தவிசாளராக அந்தோனிப்பிள்ளை ஜெபநேசன் தெரிவு

வலிகாமம் தென்மேற்குப் பிரதேச சபையின் தவிசாளராக அந்தோனிப்பிள்ளை ஜெபநேசன்  செய்யப்பட்டுள்ளார். நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்த்லில் வலிகாமம் தென்மேற்குப் பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டவர்களில் 12பேர் வெற்றி பெற்றுள்ளனர்.


இதனடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குறித்த பிரதேச சபையில் வெற்றியீட்டியவர்களுக்கான கலந்துரையாடல் அண்மையில் நடைபெற்றபோது தவிசாளராக இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக முன்னாள் தவிசாளர் அந்தோனிப்பிள்ளை ஜெபநேசன் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் உப தவிசாளராக புளட் கட்சியினர் சார்பாக சின்னையா கனேசவேல் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


மேலும் இப் பிரதேச சபையில் விஸ்வநாதன் சுப்பிரமணியம், சவுந்தரநாயகம் கனோ அச்சுதபாயன், அருட்குமார் ஜோன் ஜிப்ரிக்கோ, சின்னத்துரை மகேந்திரன், சிவசண்முகநாதன் அனுஷன், கந்தையா யெசீதன், இராசரத்தினம் வன்னிய சேகரம், பேரின்பநாயகம் சுபாகர், நாகராசா பகீரதன், சிவராசா மரியறொஷானி, ஆகியோர் கூட்டமைப்பின் சார்பில் வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு