தென்மராட்சி விபத்துகளில் நால்வர் படுகாயம்!
தென்மராட்சிப் பிரதேசத்தில் நேற்றுக் காலை இடம்பெற்ற விபத்துக்களில் தாளையடி கத்தோலிக்க பங்குத் தந்தை உட்பட நால்வர் காயமடைந்தனர். இவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சாவகச்சேரி மருத்துவமனைக்கு அருகில் இடம்பெற்ற சைக்கிள் மோட்டார் சைக்கிள் விபத்தில், தாளையடியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற கத்தோலிக்க மதகுரு அருட்பணி கபிரியேல் அருள்நேசன் அடிகள் (வயது-58), மற்றும் சைக்கிளில் சென்ற சாவகச்சேரி பெரிய அரசடியைச் சேர்ந்த மார்க்கண்டு சரவணபவன் ( வயது 67 ) ஆகியோர் காயமடைந்தனர்.
வரணியிலிருந்து யாழ்ப்பாணத்துக்குச் சென்று கொண்டிருந்தபோது, வேம்பிராய்ப் பகுதியில் சாலையின் குறுக்கே ஓடிய நாய்களுடன் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில், அம்பிகைபாகன் உதயகுமார் (வயது-38) என்பவர் காயமடைந்தார்.
கச்சாயிலிருந்து விடத்தற்பளைக்கு மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் சக்கரம் பள்ளத்தில் இறங்கியதால் தூக்கி வீசப்பட்டதில் விபத்து ஏற்பட்டது. இதில் விடத்தற்பளையைச் சேர்ந்த குணரத்தினம் குணமணி (வயது-68) என்பவர் காயமடைந்தார். இவர்கள் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் .