தென்மராட்சி விபத்துகளில் நால்வர் படுகாயம்!

ஆசிரியர் - Admin
தென்மராட்சி விபத்துகளில் நால்வர் படுகாயம்!

தென்­ம­ராட்­சிப் பிர­தே­சத்­தில் நேற்­றுக் காலை இடம்­பெற்ற விபத்­துக்­க­ளில் தாளை­யடி கத்­தோ­லிக்க பங்­குத் தந்தை உட்­பட நால்­வர் காய­ம­டைந்­த­னர். இவர்­க­ளில் இரு­வர் மேல­திக சிகிச்­சைக்­காக யாழ்.போதனா மருத்­து­வ­ம­னைக்கு அனுப்பி வைக்­கப்­பட்­ட­னர்.


சாவ­கச்­சேரி மருத்­து­வ­ம­னைக்கு அரு­கில் இடம்­பெற்ற சைக்­கிள் மோட்­டார் சைக்­கிள் விபத்­தில், தாளை­ய­டி­யி­லி­ருந்து யாழ்ப்­பா­ணம் நோக்­கிச் சென்ற கத்­தோ­லிக்க மத­குரு அருட்­பணி கபி­ரி­யேல் அருள்­நே­சன் அடி­கள் (வயது-58), மற்­றும் சைக்­கி­ளில் சென்ற சாவ­கச்­சேரி பெரிய அர­ச­டி­யைச் சேர்ந்த மார்க்­கண்டு சர­வ­ண­ப­வன் ( வயது 67 ) ஆகி­யோர் காய­ம­டைந்­த­னர்.

வர­ணி­யி­லி­ருந்து யாழ்ப்­பா­ணத்துக்­குச் சென்­று­ கொண்­டி­ருந்­த­போது, வேம்­பி­ராய்ப் பகு­தி­யில் சாலை­யின் குறுக்கே ஓடிய நாய்­க­ளு­டன் மோட்­டார் சைக்­கிள் மோதி­யது. இதில், அம்­பி­கை­பா­கன் உத­ய­கு­மார் (வயது-38) என்­ப­வர் காய­ம­டைந்­தார்.


கச்­சா­யி­லி­ருந்து விடத்­தற்­ப­ளைக்கு மக­னு­டன் மோட்­டார் சைக்­கி­ளில் சென்று கொண்­டி­ருந்த மோட்­டார் சைக்­கி­ளின் சக்­க­ரம் பள்­ளத்­தில் இறங்­கி­ய­தால் தூக்கி வீசப்­பட்­ட­தில் விபத்து ஏற்­பட்­டது. இதில் விடத்­தற்­ப­ளை­யைச் சேர்ந்த குண­ரத்­தி­னம் குண­மணி (வயது-68) என்­ப­வர் காய­ம­டைந்­தார். இவர்­கள் சாவ­கச்­சேரி மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்டு இரு­வர் மேல­திக சிகிச்­சைக்­காக யாழ்.போதனா மருத்­து­வ­ம­னைக்கு அனுப்பி வைக்­கப்­பட்­ட­னர் .

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு