29ம் திகதி பாடசாலைகள் ஆரம்பம்..! தரம் 1, தரம் 2 மாணவர்களுக்கு இப்போதில்லை..

ஆசிரியர் - Editor I
29ம் திகதி பாடசாலைகள் ஆரம்பம்..! தரம் 1, தரம் 2 மாணவர்களுக்கு இப்போதில்லை..

இலங்கையில் கொரோனா இடர்நிலை காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் அனைத்தும் இம் மாதம் 29ம் திகதி ஆரம்பமாகும். என கல்வியமைச்சு அறிவித்திருக்கின்றது. 

முதற்கட்டம் -ஜூன் 29 முதல் ஜூலை 3 ஆம் திகதி வரை ( அதிபர் ,ஆசிரியர்மார் மற்றும் நிர்வாக ஊழியர்கள் வருகை )

இரண்டாம் கட்டம் – ஜூலை 6 முதல் ஜூலை 17 வரை (வகுப்புகள் 5,11 மற்றும் 13 வரை)

மூன்றாம் கட்டம் – ஜூலை 20 (10 மற்றும் 12 ஆம் வகுப்புகள் )நான்காம் கட்டம் – ஜூலை 27 ( 3,4,6,7,8 மற்றும் 9 ஆம் வகுப்புகள் )

முதலாம், இரண்டாம் வகுப்புகள் பற்றி பின்னர் தீர்மானிக்கப்படும் .செப்ரெம்பர் 13 இல் ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சை நடக்கும்.

கல்வியமைச்சர் டலஸ் சற்று முன்னர் நடந்த செய்தியாளர் மாநாட்டில் அறிவிப்பு

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு