தமிழ்தேசிய கூட்டமைப்பில் கருணாவும், டக்ளஸ் தேவானந்தாவும் இணையலாம்.
கருணா மற்றும் டக்ளஸ் தேவானந்தா போன்றவர்கள் தமிழ்தேசிய கூட்டமைப்புடன் இணையும் சாத்தியங்கள் உள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் ஜீ.ரி.லிங்கநாதன் கூறியுள்ளார்.
ஜீ.ரி.லிங்கநாதன் நேற்று வவுனியா மாவட்டத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெ ரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார்.
மேலும் வவுனியா மாவட்டத்தில் 4 உள்ளுராட்சி சபைகளில் உறுப்பினர்களை தேர்வு செய்வதி ல் கூட்டமைப்பின் தலமை தவறிழைத்திருக்கின்றது.
அதேபோல் கூட்டமைப்பின் தலவர்களோ, அல்லது வவுனியா மாவட்டத்தில் உள்ள கூட்டமைப் பின் தலைவர்களோ கட்சிகளை முன்னிலைப்படுத்தி தீர்மானம் எடுத்திருக்கின்றனர்.
அவர்கள் உள்ளுராட்சி சபைகளின் தாற்பரியத்தையோ அல்லது மக்களின் நலன்களையோ க வனத்தில் கொண்டிருக்கவில்லை.
ஒவ்வொரு சபைகளிலும் 2 வருடம் வழங்குவதன் ஊடாக சபைகளை பலவீனமாக்கும் நடவடி க்கையினையே எடுத்திருக்கின்றது.
தியாகி துரோகி ஆவதும், துரோகி தியாகி ஆவதும், காலத்திற்கு காலம் இலங்கை வரலாற்றி ல் காணப்படுகின்றது.
இந்தவகையில் எதிர்காலத்தில் கருணா மற்றும் டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் சேரும் நிலை வரலாம் என்றார்.