தொடங்கியது யாழ். - கொழும்பு ரயில் சேவை!

ஆசிரியர் - Admin
தொடங்கியது யாழ். - கொழும்பு ரயில் சேவை!

யாழ்ப்பாணத்துக்கும், கொழும்புக்கும் இடையிலான ரயில் சேவைகள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாண ரயில் நிலைய அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்துள்ளார்.

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு இயல்பு வாழ்க்கை மீளத் திரும்பும் நிலையில், பொதுப் போக்குவரத்து சேவைகள் இன்று வழமைக்குத் திரும்பியுள்ளது. இதனையடுத்து, இன்று தொடக்கம், யாழ்ப்பாணம்- கொழும்பு இடையிலான ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 5.45 மணிக்கு, யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கான முதலாவது ரயில் சேவை இடம்பெற்றது. இரண்டாவது சேவை,காலை 9. 45 மணிக்கு இடம்பெற்றதாகவும் யாழ்ப்பாண ரயில் நிலைய அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண ரயில் நிலையத்துக்குள் நுழையும் அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னரே, பயணத்தை தொடர அனுமதிக்கப்படுகிறார்கள் என்றும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு