கொழும்பு சென்றவர் சடலமாக மீட்பு.

ஆசிரியர் - Editor I
கொழும்பு சென்றவர் சடலமாக மீட்பு.


கொழும்பு செல்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்ட முதியவர் ஒருவர் எழுதுமட்டுவாள் காட்டு பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 


மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, எழுதுமட்டுவாள் வடக்கு பகுதிi ய சேர்ந்த செல்வரட்ணம் சுரேஸ்குமார் வயது 51 என்பவர் கடந்த 11ம் திகதி மாலை கொ ழும்பு செல்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். 


பின்னர் அவர் தொடர்பான தகவல்கள் இல்லாத நிலையில் 12ம் திகதி மறுநாள் அவருடை ய உறவினர்கள் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். 


இந்நிலையில் எழுதுமட்டுவாள் காட்டு பகுதியிலிருந்து மேற்படி முதியவர் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காட்டு பகுதிக்கு மாடு மேய்க்க சென்றவர்கள் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சம்ப இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை அடையாளம் கண்டனர்.


சம்பவ இடத்திற்கு சென்ற சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஜெ.கஜநிதிபாலன் சட்ட ரீதியான விசாரணைகளை மேற்கொண்டதுடன், சடலத்தினை சட்ட வைத்திய நிபுணர் ஊடாக பிரதே பரிசோதனை செய்வதற்கு உத்தரவு வழங்கியுள்ளார்.


மேலிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு