குடும்பஸ்தர் மீது தாக்குதல்
யாழ்.காரைநகர் பகுதியில் 20 பேர் கொண்ட இளைஞர் கும்பலினால் இளம் குடும்பஸ்தர் மீ து தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் நேற்று மாலை காரைநகர்-ஊரி பகுதியில் இடம் பெற்றுள்ளது.
குறித்த தாக்குதல் சம்பவத்தில் தொல்புரம் மேற்கு சுழிபுரத்தை சேர்ந்த இ.மகேஸ்வரன் வய து 25 என்ற இளம் குடும்பஸ்த்தரே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
காரைநகர் பகுதியில் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, வழிமறித்த இளைஞர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
தன்னை தாக்கிய நபர்களின் பெயர்களை குறிப்பிட்ட மகேஸ்வரன்,
சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுத்துள்ளார்.
தாக்குதலுக்குள்ளான மகேஸ்வரன் தற்போது சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசா லையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.