புத்தூர் ஆவரங்கால் பகுதியில் வாள்வெட்டு

ஆசிரியர் - Editor I
புத்தூர் ஆவரங்கால் பகுதியில் வாள்வெட்டு

புத்தூர் ஆவரங்கால் சர்வோதயா வீதியில் உள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து வீ ட்டிலிருந்த குடும்ப பெண்ணை அச்சுறுத்தியதுடன், கணவனை தாக்கிய வாள்வெட்டு குழு வை சேர்ந்த 5 இளைஞர்களை எதிர்வரும் 22ம் திகதி விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.யூட்சன் உத்தரவிட்டுள்ளார். 


மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கடந்த 14ம் திகதி இரவு 10 ம ணியளவில் இடம்பெற்றதாக அச்சுவேலி பொலிஸார் கூறியுள்ளனர். வாள்வெட்டு குழுவின் தாக்கதலுக்குள்ளான யோகராசா சென்தூரன் படுகாயங்களுக்குள்ளான நிலையில் யாழ்.போ தனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வாள்வெட்டு குழுவை சேர்ந்த இளைஞர்கள் கடந்த வ ருடம் மதுபோதையில் அச்சுவேலி பிரதே வைத்தியசாலைக்குள் நுழைந்து அங்கிருந்த சிற் றூழியர்களை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டி ருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கதாகும். 


மேலும் குறித்த இளைஞர்கள் ஆவரங்கால் சர்வோதயா வீதியை சேர்ந்தவர்கள் என அச்சு வேலி பொலிஸார் கூறுகின்றனர். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு