வழமைக்கு திரும்புகிறது சேவைகள்..! இன்று தீர்மானிக்கப்பட்டதாக அரசு அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
வழமைக்கு திரும்புகிறது சேவைகள்..! இன்று தீர்மானிக்கப்பட்டதாக அரசு அறிவிப்பு..

இலங்கையின் சகல மாவட்டங்களிலும் 8ம் திகதி முதல் சகல போக்குவரத்து சேவைகளும் வழமைக்கு திரும்பவுள்ள நிலையில், சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் இறுக்கமாக பின்பற்றப்படும். 

மேற்கண்டவாறு போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. இன்று முற்பகல் போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் குறித்த அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

எதிர்வரும் தினங்களில் பொதுமக்களின் நடத்தை, கொவிட்-19 தொற்று நிலைமை மற்றும் சுகாதார பிரிவினால் பெற்றுக் கொடுக்கப்படும் ஆலோசனைகளை கருத்திற் கொண்டு எதிர்வரும் 8ம் திகதி முதல் பொது போக்குவரத்து சேவையை 

வழமைப்போல் நடாத்திச் செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு