நாளுக்கு நாள் நாட்டில் நோயாளர் எண்ணிக்கை அதிகரிப்பு அச்சத்தை ஏற்படுத்துகிறது..! பதறுகிறது மருத்துவ அதிகாரிகள் சங்கம்..
இலங்கையில் கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை 2 ஆயிரம் தொடக்கம் 3 ஆயிரமாக உயர்ந்தால் மிகப்பெரும் ஆபத்தை நாடு சந்திக்க நேரிடும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
இது குறித்து இலங்கை மருத்துவர் சங்கத்தின் சார்பில் பிரதி பொது செயலாளரான டாக்டர் நவீன் டி சொய்ஸா மேலும் கூறுகையில்,
குறிப்பாக குவைட் நாட்டிலிருந்து வந்த பலருக்கு தொற்று ஏற்பட்டிருக்கின்றது. இன்னும் பலர் நாடு திரும்பி வருகின்றனர்.
தற்போது கொரோனா கொத்துகொத்தாக நிரம்ப ஆரம்பித்திருப்பதால் இரண்டாவது நிலையை அடையுமோ என்கிற அச்சமும் ஏற்பட்டிருக்கின்றது என்று அவர் கூறினார்.