பேஸ்புக்கில் காதல்..! காதலியை நோில் பார்க்க சென்ற இளைஞன் அடித்து முறிக்கப்பட்டு தொலைபேசி, பணம் திருட்டு. யாழ்.கொக்குவிலில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
பேஸ்புக்கில் காதல்..! காதலியை நோில் பார்க்க சென்ற இளைஞன் அடித்து முறிக்கப்பட்டு தொலைபேசி, பணம் திருட்டு. யாழ்.கொக்குவிலில் சம்பவம்..

பேஸ்புக் மூலம் காதலித்து வந்தவர் காதலியை நோில் சந்திக்க சென்றபோது வழிமறித்த இளைஞர்கள் குழு குறித்த இளைஞனை சரமாரியாக தாக்கியதுடன், பணம் மற்றும் தொலைபேசி ஆகியவற்றை பறித்து சென்றுள்ளது. 

இந்த சம்பவம் இன்று மாலை கொக்குவில் கிழக்கு பொற்பதி வீதியில் இடம்பெற்றிருக்கின்றது. இச் சம்பவத்தில் இளைஞருடை தலையில் காயம் ஏற்பட்டுள்ளது என்றும், சிகிச்சைக்காக அவர் யாழ்.போதனா வைத்திய சாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது, ஆவரங்கால் பகுதியில் உள்ள குறித்த இளைஞர் பேஸ்புக்கில் ஒரு பெண்ணுடன் தொடர்பு கொண்டு உரையாடிவந்துள்ளார். இந்நிலையில் இன்று மதியம் இருவரும் இராமநாதன் வீதியில் உள்ள 

ராஜா கிறீம்கவுசில் சந்திப்பதாக பேசிக் கொண்டுள்ளனர். இதன்படி குறித்த இளைஞர் இருவரும் பேசிவைத்து நேரத்திற்கு அங்கு வந்துள்ளார். இருப்பினும் அந்த பெண் அங்கு வரவில்லை. இந்நிலையில் அங்கு 3 மோட்டார் சைக்கிலில் வந்த இளைஞர்கள் 

தாங்கள் பொலிஸ் என்று அடையாளப்படுத்திக் கொண்டதுடன், குறித்த இளைஞரை விசாரிக்க வேண்டும், அதனால் தங்களுடன் வருமாறு கூறி மோட்டார் சைக்கில் இழுத்து ஏற்றியுள்ளனர். அங்கிருந்து கொக்குவில் பெற்பதி வீதிக்கு வந்த அந்த கும்பல், 

அங்குள்ள பிள்ளையார் ஆலயத்திற்கு பின்னால் வைத்து குறித்த இளைஞரை தாக்கியுள்ளனர். அத்துடன் அவரிடம் இருந்த கைத்தொலைபேசி மற்றும் பணத்தினை பறித்துள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பி ஓடிய குறித்த இளைஞர் அப்பகுதியில் உள்ள 

வீடொன்றில் முன்னால் விழுந்துள்ளார். சிறிது நேரம் அங்கு நின்று அந்த இளைஞர் குழு பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது. இதன் பின்னர் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் இரத்தம் வழிந்தவாறு வீதிக்கு வந்த இளைஞர் 

அங்கிருந்துவர்களின் உதவியுடன் வைத்திய சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு