நாடு முழுவதும் வர்த்தக நிலையங்கள் சுற்றிவளைக்கப்படும்..! நிர்ணயத்தை மீறும் வர்த்தகர்கள் கைது..

ஆசிரியர் - Editor I
நாடு முழுவதும் வர்த்தக நிலையங்கள் சுற்றிவளைக்கப்படும்..! நிர்ணயத்தை மீறும் வர்த்தகர்கள் கைது..

இலங்கையில் அரிசிக்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும் நிலையில் நிர்ணய விலையை மீறி அதிகவிலையில் அரிசி விற்பனை செய்யும் வியாபாரிகளை கண்டுபிடிப்பதற்கும் கைது செய்வதற்கும் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. 

நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையினால் இந்த சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன், நாடு முழுவதும் இந்த சிறப்பு நடவடிக்கைக்காக விசேட குழுக்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றது. 

இந்த குழுக்கள் நாட்டின் சகல பகுதிகளிலும் அதிரடி சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டு நிர்ணய விலை கட்டுப்பாடு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதுடன், நிர்ணய விலையை மீறும் வர்த்தகர்களை உடனடியாக கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு