TVS 50 மோட்டார் சைக்கிளை மட்டும் திருடிவந்த நுாதன திருடன் சிக்கினான்..! தலா 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட 26 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு..

ஆசிரியர் - Editor I
TVS 50 மோட்டார் சைக்கிளை மட்டும் திருடிவந்த நுாதன திருடன் சிக்கினான்..! தலா 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட 26 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு..

ஒரே வகையான 26 மோட்டார் சைக்கிள்களை திருடிய குற்றச்சாட்டில் 4 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

காலி மாவட்டத்தில் தொடர்ச்சியாக ஒரே மாதிரியான மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டுவந்த நிலையில், 

சீ.சி.ரீ.வி கமராவின் உதவியுடன் தேடுதல் மேற்கொண்ட பொலிஸார் கொள்ளையிடப்படுவதை உறுதி செய்தபோதும், 

கொள்ளையன் முகமூடி அணிந்திருந்தமையால் அடையாளம் காண முடியவில்லை. இதனையடுத்து மேலும் 30 சீ.சி.ரீ.வி கமரா பதிவுகளை ஆராய்ந்த பொலிஸார்

கொள்ளைக்காரனை அடையாளம் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து கொள்ளைக்காரன் கைது செய்யப்பட்டுள்ளார். 

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஒரே மாதிரியான 26 மோட்டார் சைக்கிள்களை திருடியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், 

அவற்றை தலா 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்தமையும் கண்டறியப்பட்டுள்ளது. 

இதேபோல் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு