யாழ். வடமராட்சியில் நாளை மின்தடை

ஆசிரியர் - Admin
யாழ். வடமராட்சியில் நாளை மின்தடை

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். வடமராட்சியின் சில பகுதிகளில் நாளை சனிக்கிழமை(17) மின்சாரம் தடைப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, நாளை காலை-08.30 மணி முதல் மாலை-05.30 மணி வரை யாழ். வடமராட்சியின் உடுப்பிட்டி, தொண்டைமானாறு, கெருடாவில், வல்வெட்டித்துறை, கமபர்மலை, பொக்கணை, தம்பாட்டி, நாரந்தனை வடக்கு, மண்டான், புறாப் பொறுக்கி, அண்ணா சிலையடி, பொலிகண்டி, எள்ளங்குளம், நவிண்டில் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு