வெட்டி ஓடிய ஈ.பி.டி.பி..! சளைக்காமல் பிரதமரை சந்தித்தார் சுமந்திரன், தமிழ் அரசியல் கைதிகள் வாழ்வில் வருமா மறுமலர்ச்சி..?

ஆசிரியர் - Editor I
வெட்டி ஓடிய ஈ.பி.டி.பி..! சளைக்காமல் பிரதமரை சந்தித்தார் சுமந்திரன், தமிழ் அரசியல் கைதிகள் வாழ்வில் வருமா மறுமலர்ச்சி..?

சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக இன்று மாலை தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சமந்திரன் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்திக்க திட்டமிட்டிருந்த நிலையில் ஈ.பி.டி.பி முந்திக்கொண்டு தாம் மகஜர் ஒன்றை வழங்கியிருந்தனர். 

எனினும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்து வழக்கு விசாரணைகள் நிறைவடைந்தபோதும் சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் 47 தமிழ் அரசியல் கைதிகள் உள்ளடங்கலாக

91 தமிழ் அரசியல் கைதிகளின் பெயர் விபரங்கள் மற்றும் அவர்களது வழக்குகள் தொடர்பான பூரணப்படுத்தப்பட்ட தகவல்களை பிரதமரிடம் கையளித்தார். மேலும் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாகவும் பிரதமருடன் சுமந்திரன் ஒரு மணிநேரம் உரையாடல் நடாத்தியிருக்கின்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு