சிறுமியைக் கடத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

ஆசிரியர் - Admin
சிறுமியைக் கடத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

சிறு­மி­யைக் கடத்­திச் சென்று பாலி­யல் துஸ்­பி­ர­யோ­கம் செய்த இளை­ஞ­னுக்கு 5 வரு­டங்­க­ளுக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­ட 2 வருட கடூ­ழி­யச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்டது. சிறு­மிக்கு இழப்­பீ­டாக 50ஆயி­ரம் ரூபா செலுத்­த­வேண்­டும் என்­றும் தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டது.

யாழ்ப்­பா­ணப் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பகு­தி­யில் 2004ஆம் ஆண்டு சம்­ப­வம் இடம்­பெற்­றது. பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பகு­தி­யைச் சேர்ந்த இளை­ஞன் கைது செய்­யப்­பட்­டார். இந்த வழக்கு யாழ்ப்­பாண மேல்­நீ­தி­மன்­றில் விசா­ர­ணைக்கு வந்­த­போது சந்­தே­க­ந­பர் தன்­மீ­தான குற்­றத்தை ஏற்­றுக் கொண்­டார். அத­னை­ய­டுத்­துக் குறித்த தண்­டனை விதிக்­கப்­பட்­டது. 

குற்­ற­வாளி இழப்­பீடு செலுத்­தத் தவ­றின் 3 ஆயி­ரம் ரூபா தண்­டம் செலுத்த வேண்­டும் என்­றும் மேல்­நீ­தி­மன்ற நீதி­பதி மா.இளஞ்­செ­ழி­யன் உத்­த­ர­விட்­டார். வழக்­குத் தொடு­நர் தரப்­பில் அரச சட்­ட­வாதி நாக­ரட்­ணம் நிஷாந் முற்­பட்­டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு