சிறுமியைக் கடத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் துஸ்பிரயோகம் செய்த இளைஞனுக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சிறுமிக்கு இழப்பீடாக 50ஆயிரம் ரூபா செலுத்தவேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.
யாழ்ப்பாணப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 2004ஆம் ஆண்டு சம்பவம் இடம்பெற்றது. பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த இளைஞன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு யாழ்ப்பாண மேல்நீதிமன்றில் விசாரணைக்கு வந்தபோது சந்தேகநபர் தன்மீதான குற்றத்தை ஏற்றுக் கொண்டார். அதனையடுத்துக் குறித்த தண்டனை விதிக்கப்பட்டது.குற்றவாளி இழப்பீடு செலுத்தத் தவறின் 3 ஆயிரம் ரூபா தண்டம் செலுத்த வேண்டும் என்றும் மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டார். வழக்குத் தொடுநர் தரப்பில் அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந் முற்பட்டார்.