யாழ்.மாநகர சபையை கைப்பற்றியது த.தே.கூ

ஆசிரியர் - Admin
யாழ்.மாநகர சபையை கைப்பற்றியது த.தே.கூ

இன்று நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் யாழ். மாநகர சபையில் 14 வட்டாரங்களில் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்று பெரும்பான்மை வகித்து வருகின்றது. 

சைக்கில் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 10 வட்டாரங்களையும், யானை சின்னத்தில் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சி ஒரு வட்டாரத்தையும், வீணை சின்னத்தில் போட்டியிட்ட ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி ஒருவட்டாரத்தையும் கைப்பற்றியது. 

வட்டார அடிப்படையில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள போதும், இதுவரையில் விகிதாசார அடிப்படையிலான ஆசனங்கள் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தகது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு