குப்பிளானில் குலுக்கல் முறையில் ஒரு ஆசனம் வென்றது த.தே.ம.மு

ஆசிரியர் - Editor I
குப்பிளானில் குலுக்கல் முறையில் ஒரு ஆசனம் வென்றது த.தே.ம.மு

உள்ளூராட்சி சபை தேர்தலில் குப்பிளான் பகுதியில் சிறீலங்கா சுதந்திர கட்சி மற்று ம் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகி ய கட்சிகள் சார்பில் போட்டியிட்ட வேட்பாள ர்கள் இருவர் 314 வாக்குகளை பெற்றனர்.

மேற்படி இரு வாக்காளர்களும் சம வாக்கி னை பெற்ற நிலையில் இறுதி தீர்மானத் தினை எடுப்பதற்காக தேர்தல் திணைக்க ள அதிகாரிகள் மற்றும் இரு கட்சிகள் சார்ந்தவர்கள் முன்னிலையில் இரு கட்சிகளி னதும் பெயர்கள் எழுதப்பட்டு குலுக்கல் மு றையில் ஒரு கட்சியை தேர்ந்தெடுக்க நட வடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்கமைய நள்ளிரவு 1 மணிக்கு இரு கட் சிகளினதும் பெயர்கள் குலுக்கப்பட்டது. இதன்போது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்பட்ட து. இதற்கமைய அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சட்டரீதியாக வெற்றி பெற்றுள் ளது என அறிவிக்கப்பட்டது.







பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு