10ம் திகதி 8 மணிக்குள் சகல முடிவுகளும் வெளியாகும்.

ஆசிரியர் - Editor I
10ம் திகதி 8 மணிக்குள் சகல முடிவுகளும் வெளியாகும்.

நாளை இரவு 8 மணிக்குள் முழு 

தேர்தல் முடிவுகளும் வெளியாகும்

உள்ளுராட்சித் தேர்தலுக்காக யாழ். மாவட்டத்தில் 521 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 


இங்கு அளிக்கப்படும் வாக்குகள் 243 வாக்கென்னும் நிலையங்களின் ஊடாக விரைவாக எண்ணப்பட்டு, இரவு 8 மணியளவில் சகல தேர்தல் இறுதி முடிவுகளும் அறிவிக்கப்படும் என கூறியுள்ள  மாவட்ட அரச அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான நா.வேதநாயகன் 


இம்முறை வாக்களிப்பு நடைபெற்று முடிந்த பின்னர் அந்தந்மத வாக்களிப்பு நிலையங்களில் வைத்தே வாக்குகளை எண்ணும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. 


ஒரு வாட்டாரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வாக்களிப்பு நிலையங்கள் இருந்தால், அதில் ஒரு வாக்களிப்பு நிலையத்தினை தெரிவு செய்து அங்கு வைத்து, தனித்தனியாக வாக்குகள் எண்ணப்படும் எனவும் அவர் கூறினார்.


தபால் மூல வாக்குக அந்தந் வட்டாரங்களின் எந்த வாக்கென்னும் நிலையங்களுக்கு உரியதோ அந்தந்த வாக்களிப்பு நிலையங்களுக்கு அவை அனுப்பிவைக்கப்படும். 


ஒரு வாக்கென்னும் நிலையத்திற்கு சேர வேண்டிய தபால் மூல வாக்குகள் 50 ற்கும் மேற்பட்டதாக இருப்பின், அவ் hக்கென்னும் நிலையத்தில் தனியாக ஒரு அறையில் வைத்து தபால் மூல வாக்குகள் எண்ணப்படும். 


50 ற்கும் குறைந்த தபால் மூல வாக்குகள் இருப்பின் அவை சாதாரண வாக்குகளுடன் சேர்த்து, அந்தந்த வட்டார வாக்கென்னும் நிலையத்தில் வைத்து எண்ணப்படும். 

ஒவ்வொரு வட்டாரங்களின் வாக்களிப்பின் முடிவுகள் அந்த வட்டாரத்திற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட உதவி தெரிவத்தாட்சி அலுவலகரினால் அறிவிக்கப்படும். 


அதன்படி எமது மாவட்டத்தில் உள்ள யாழ்.மாநகர சபை, 3 நகர சபைகள் மற்றும் 13 பிரதேச சபைகள் உள்ளிட்ட 17 உள்ளுராட்சி மன்றங்களுக்கான முடிவுகளும் தனித்தனியாக வெளியிடப்படும். 


அனேகமாக இரவு 8 மணியளவில் யாழ்.மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகளை முழுமையாகப் பெறக்கூயதாக இருக்கும் என்று எதிர்;பார்க்கின்றோம் எனவும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மேலும் கூறினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு