தேல்தல் குற்றங்கள் தொடர்பில் யாழில் 40 முறைப்பாடுகள் பதிவு
யாழ்.மாவட்டத்தில் தேர்தல் குற்றங்கள் தொடர்பில் 40 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாக அதிபரும், தெரிவத்தாட்சி அலுவலகருமான என்.வேதநாயன் தெரிவித்தார்.
குறிப்பாக வீதிகளில் பெயர் எழுதுதல், சுவரொட்டிகள் ஒட்டப்படுதல் குறித்து முறைப்பாடுகள் கிடைத்தன. அந்த முறைப்பாடுகள் மீதான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வன்முறைகள் என்ற வகையில் எந்த முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை.
யாழ்.மாவட்டத்தின் 5 முறைப்பாட்டு மையங்கள் உள்ளன. அதில் தேர்தல் உத்தியோகஸ்தர்களும், பொலிஸாரும் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். முறைப்பாடுகள் பதிவு செயப்படும் பட்சத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.