மதபோதகரின் ஆராதனையில் கலந்து கொண்டிருந்த 326 பேருடைய தனிமைப்படுத்தல் இறுக்கப்படுகிறது..!
யாழ்.அரியாலை பிலதெல்பியா தேவாலய ஆராதனையில் கலந்து கொண்ட நிலையில் தனிமை படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் 326 போின் தனிமைப்படுத்தலை இறுக்கமாக்குமாறு வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.
மேலும் இவ்வாறு தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கு தொடர்ச்சியான காய்ச்சல், வறண்ட இ ருமல், தொண்டை நோ போன்றன இருக்குமானால் உடனடியாக அவர்கள் தமது பகுதி சுகாதார பரிசோதகரை தொடர்பு கொள்ளவேண்டும் எனவும் பணிப்பாளர் கேட்டுள்ளார்.