7 பேருக்கும் நோய் தொற்று இல்லை. நிலமை மகிழ்ச்சியளிக்கிறது, ஆனாலும் ஆபத்து நீங்கவில்லை..! யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் செய்தி..
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சந்தேகத்தின் பெயரில் அனுமதிக்கப்பட்ட 7 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியலிங்கம் கூறியுள்ளார்.
மேலும் கொரோனா அச்சம் யாழ்.மாவட்டத்தில் தணியவில்லை. ஆகவே மக்கள் மிக அவதானத்துடன் நடந்து கொள்ளவேண்டும். எனவும் அவர் கூறியுள்ளார்.