தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மக்களுடைய கட்சி – இது சுமந்திரனின் கட்சியுமல்ல மாவையின் கட்சியுமல்ல – ரெலோ சிறிகாந்தா

ஆசிரியர் - Admin
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மக்களுடைய கட்சி – இது சுமந்திரனின் கட்சியுமல்ல மாவையின் கட்சியுமல்ல – ரெலோ சிறிகாந்தா

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உங்களுடைய கட்சி. மக்களுடைய கட்சி. அது மாவை சேனாதிராஜாவினுடைய கட்சியோ, தம்பி சுமந்திரனுடைய கட்சியோ, அல்லது இங்கிருக்கக்கூடிய தலைவர்களுடைய கட்சியே அல்ல. இது மக்களுடைய கட்சி. அது தமிழ் மக்களுடைய கவசம், தமிழ் மக்களுடைய கேடயம், அது தமிழர்களுடைய விடுதலைப் போராட்டத்தின் ஜனநாயகப் போர்வாள் எனவே நீங்கள் இக் கட்சிக்கே வாக்களிக்க வேண்டும் என ரெலோ அமைப்பின் செயலாளரும் சட்டத்தரணியுமான சிறிகாந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று (05.02.2018) மாலை யாழ்ப்பாணம் குருநகர் பிரதேசத்தில் நடைபெற்றது. அக் கூட்டத்தில் உரையாற்றியபோதே சிறிகாந்தா தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை மக்களுடைய கட்சி என உரையாற்றியுள்ளார்.

அங்கு மேலும் தெரிவித்த அவர்,

“ நாங்கள் பௌத்தத்துக்கு முன்னுரிமை அளிப்பதை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. பிரிக்கப்படாத வடக்கு கிழக்கில் சுய நிர்ணய அடிப்படையில் சமஷ்டித் தீர்வினையே நாங்கள் கோரிநிற்கின்றோம். இதற்கானவே நாங்கள் போராடிவருகின்றோம். எனவே நீங்கள் மக்கள் கட்சியான இக் கட்சிக்கு வாக்களித்து இதனைப் பலப்படுத்தவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு