கொடிகாமம் நகரில் உள்ள 13 உணவகங்களுக்கு எதிராக நடவடிக்கை
கொடிகாமம் நகரப்பகுதியில் உள்ள உணவகங்கள் மீது நடத்திய திடீர்ப் பரிசோதனையில் காலாவதியான பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்த மற்றும் சுகாதாரச் சீர்கேட்டுடன் இயங்கிய 13 உணவக உரிமையாளர்களுக்கு எதிராகவும், மென்பான நிறுவனங்களுக்கும் எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சாவகச்சேரி சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.
சாவகச்சேரி சுகாதாரத் திணைக்களத்தினர் கொடிகாமம் நகரப் பகுதியில் இயங்கும் உணவகங்கள் மீது திடீர் பரிசோதனைகளை மேற்கொண்டனர். அவ்வேளையில் திகதி காலாவதியான மென்பானங்கள், சொக்லேட், பிஸ்கட் வகைள் விற்பனைக்கு வைத்திருந்தமையைக் கண்டுபிடித்தனர்.
உணவகங்களில் வைக்கப்பட்டிருந்த மென்பானங்களில் தவறான சுட்டுத்துண்டுகள் காணப்பட்டமையும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் பொருள்கள் பலவற்றைக் அதிகாரிகள் கைப்பற்றி எடுத்துச் சென்றுள்ளனர். இதுதொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். என மேலும் தெரிவிக்கப்பட்டது.