வடக்கு, கிழக்கு மாகாணங்கள் முதலிடத்தில்! பொலிசாருக்கு எதிராக 1500 முறைப்பாடுகள்

ஆசிரியர் - Editor II
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் முதலிடத்தில்! பொலிசாருக்கு எதிராக 1500 முறைப்பாடுகள்

பொலிஸாருக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களே முன்னணியில் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

கடந்த ஆண்டில் பொலிஸாருக்கு எதிராக 1500 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இவற்றில் பெரும்பாலானவை, பொலிஸில் மேற்கொள்ளப்படும் முறைப்பாடுகள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தாமை, பக்கச்சார்பாக நடந்து கொள்ளல், அதிகார துஷ்பிரயோகம், தடுப்புக் காவலில் வைத்து தாக்குதல், பொய்யான குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்தல் போன்றனவாகும்.

இதேவேளை, கடந்த ஆண்டில் பொலிஸார் இரண்டு மனிதப் படுகொலைகள் மற்றும் பெண்கள் மற்றும் சிறுவர்களிடம் வரம்பு மீறி நடந்து கொண்டமை, இலஞ்சம் வாங்கியமை போன்ற குற்றச்சாட்டுகளையும் எதிர்கொண்டுள்ளனர்.

மேலும், கடந்த ஆண்டில் மட்டும் மட்டக்களப்பு நகரத்தில் இருந்து பொலிஸாருக்கு எதிராக சுமார் 140 முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது<

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு