70வது சுதந்திர தினம் யாழ்.மாவட்ட செயலகத்தில்.

ஆசிரியர் - Editor I
70வது சுதந்திர தினம் யாழ்.மாவட்ட செயலகத்தில்.

இலங்கையின் 70வது சுதந்திரதின நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணத்திலும் இடம்பெற்றது

யாழ் மாவட்டத்திற்கான பிரதான சுதந்திரதின நிகழ்வு யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று காலை இடம்பெற்றது

யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் கூரே பிரதம அதிதியாக கலந்துகொண்டு தேசியக்கொடியினை ஏற்றி வைத்தார்

இராணுவத்தினர், கடற்படையினர், விமானப்படையினர் மற்றும் பொலிசாரின் அணுவகுப்புகள் மற்றும் சமய கலை கலாச்சாரங்களை அடையாளப்படுத்தும்விதமான ஊர்வலங்களும் இடம்பெற்றன.

சிங்களம் மற்றும் தமிழில் தேசியகீதம் இசைக்கப்பட்டு மரியாதை வழங்கப்பட்டதுடன் நாட்டிற்காக தமது இன்னுயிர்களை தியாகம்செய்தவர்களுக்கும் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அத்துடன் 70வது சுதந்திரதினத்தை அடையாளப்படுத்தும் விதமாக மரக்கன்றுகளும் பிரதம விருந்தினர்களால் நாட்டிவைக்கப்பட்டது.

அரச,அதிகாரிகள்,அலுவலர்கள்,முப்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு