நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தர்சினி மீது வாள் வெட்டு தாக்குதல்? நடந்தது என்ன_!

ஆசிரியர் - Admin
நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தர்சினி மீது வாள் வெட்டு தாக்குதல்? நடந்தது என்ன_!

நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது மீசாலை புத்தூர் சந்தி பகுதியில் வைத்து வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் இன்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றது. சம்பவத்தில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தரான 24 வயதுடைய யோ.தர்சினி என்பவர் காயமடைந்து சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் பாதிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரின் குடும்ப பிரச்சனையே இந்தத் தாக்குதலுக்கு காரணம் என தெரிவித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு