​70 ஆவது சுதந்திரதினத்தில் வடக்கு,கிழக்கு தமிழ் பேசும் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளோம்: முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன்

ஆசிரியர் - Admin
​70 ஆவது சுதந்திரதினத்தில் வடக்கு,கிழக்கு தமிழ் பேசும் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளோம்: முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன்

70 ஆவது சுதந்திரதினத்தில் வடக்கு,கிழக்கு தமிழ் பேசும் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளோம். என வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் தெரிவிப்பு..

சமஷ்டி அரசியல் யாப்பின் கீழ் உண்மையான அதிகாப் பகிர்வு பெற்றாலேயே அன்றி நாம் எமது பறி கொடுக்கப்பட்ட உரித்துக்களை மீண்டும் பெற முடியாது. ஆகவே பிப்ரவரி நான்காந் திகதியை எவ்வாறு தமிழர்களாகிய நாங்கள் கொண்டாட முடியும்? இவ் விடயம் சம்பந்தமாக எனது இணைத்தலைவர்களுடன் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை.

ஆனால் அவர்கள் இருவரும் என் கருத்தை ஏற்றுக் கொள்வார்கள் என்று திடமாக நம்புகின்றேன். காரணம் தமிழர்கள் அனைவரும் ஏமாற்றப்பட்டுள்ளோம், கைவிடப்பட்டுள்ளோம் என்றே நாம் திடமாக நம்புகின்றோம்.என மாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.

இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினம் தொடர்பாக ஊடகவியாளர்கள் கேள்விக்காக பதிலுக்கு கருத்தினை வெளியீடும் போது அவர் இதனை தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு