வடக்கு, கிழக்கில் தனித்துப் போட்டி!

ஆசிரியர் - Admin
வடக்கு, கிழக்கில் தனித்துப் போட்டி!

நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் 'வெற்றிலை' அல்லது 'கை' சின்னத்தில் தனித்துப் போட்டியிடுவது தொடர்பில் கலந்துரையாடி வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த இராஜாங்க அமைச்சர் திலங்க சுமதிபால தெரிவித்தார்.

"நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான கூட்டணியில் போட்டியிடுவது என்பதே எமது தீர்மானம். எந்தச் சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பாக நாங்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. எனினும், தற்போதுள்ள நிலையில் மக்கள் மத்தியில் 'மொட்டு' சின்னமே பிரபலமடைந்திருக்கின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பொறுத்தவரை 22 மாவட்டங்களிலும் ஒரே சின்னத்தில் போட்டியிடாமல், 15 மாவட்டங்களில் ஒரு சின்னத்திலும் அதாவது 'மொட்டு' சின்னத்திலும், ஏனைய மாவட்டங்களில் 'வெற்றிலை' அல்லது 'கை' சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பாகவும் கலந்துரையாடி வருகின்றோம்.

ஏனெனில் கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு குறிப்பிடத்தக்க வாக்குகள் கிடைக்கப்பெற்றன. அந்த வாக்குகளைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்" என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு