யாழ்.தெல்லிப்பழையில் வீடொன்றிலிருத்து தாய் சடலமாக மீட்பு, மகனை காணவில்லை...

ஆசிரியர் - Editor I
யாழ்.தெல்லிப்பழையில் வீடொன்றிலிருத்து தாய் சடலமாக மீட்பு, மகனை காணவில்லை...

யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை பகுதியில் வீடொன்றில் இருந்து சந்தேகத்துக்கு இடமான முறையில் பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை உயிரிழந்த பெண்ணின் மகனான 16 வயதுடைய சிறுவன் வீட்டிலிருந்து காணாமல் போயுள்ளதுடன், வீட்டின் சுவர்களில் இரத்தக் கறைகளும் காணப்படுகின்றன. 

தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய பெண்ணே உயிரிழந்தவர் ஆவார். 

அவர் தனது இரு பிள்ளைகளுடன் வசித்து வந்ததாகவும், அவரது கணவர் வெளிநாட்டில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில், உயிரிழந்த பெண்ணின் மகள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (3) அருகிலுள்ள வீட்டில் தூங்கச் சென்றவேளை வீட்டில் தாயும் மகனும் மட்டுமே இருந்துள்ளனர். 

அயல் வீட்டில் தூங்கச் சென்ற மகள் மறுநாள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது தாய் உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். அதேவேளை, தனது சகோதரன் வீட்டில் இல்லாததையும் அறிந்துள்ளார். 

அது தொடர்பில் அயல் வீட்டாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து, அயல் வீட்டார் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். 

பின்னர், சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன், சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். 

அத்துடன் காணாமல்போன சிறுவனை தேடும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர். 

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு