விடுதலைப் புலிகள் அமைப்பிற்குள் மறைமுக படையணி! ஃஆய்த எழுத்தின் ரகசியம் -

ஆசிரியர் - Editor II
விடுதலைப் புலிகள் அமைப்பிற்குள் மறைமுக படையணி! ஃஆய்த எழுத்தின் ரகசியம் -

முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகள் தொடர்பான முக்கிய ஆவணங்கள் சில சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

இந்த ஆவணங்களின் அடிப்படையில் விடுதலைப் புலிகளின் (ஃ)ஆய்த எழுத்து தகடு தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.

ஆயுத எழுத்து பதித்த படையணி, விடுதலைப் புலிகளின் எந்தப் பிரிவை சார்ந்தவர்கள் என்று புரியாத புதிராக காணப்பட்டது.

இந்நிலையில் இன்று மீட்கப்பட்ட சில ஆவணங்களில் குறித்த படையணி விடுதலைப் புலிகளின் படைய புலனாய்வு பிரிவு என்று தெரியவந்துள்ளது.

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளின் இராணுவக் கட்டமைப்புக்குள், வேவு பார்க்கும் ஆளை ஊடுருவும் அணி ஒன்று ஊடுருவியிருந்தது.

இவர்கள் விடுதலைப் புலிகளின் தாக்குதல் படையணிகளின் நகர்வுகள், அவர்களின் தாக்குதல் திட்டங்கள், மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் மக்களுக்கு கசப்பு உணர்வு ஏற்படுத்தும் செயற்திட்டங்கள் போன்ற நாசகார வேலைகளை செய்து வந்துள்ளதாக விடுதலைப் புலிகள் அப்பொழுது குற்றம் சாட்டியிருந்ததாக கூறப்படுகின்றது.

இவ்வாறான உளவாளிகளை இனங்கண்டு அவர்களை கைது செய்வதற்காக விடுதலைப் புலிகளின் புலனாய்வு பிரிவு இந்த படையணியை உருவாக்கியுள்ளதாக தெரிய வருகிறது..

இவ்வாறு உருவாக்கம் பெற்ற படைப்பிரிவிற்கு விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் இந்த ஃ ஆய்த எழுத்தை உத்தியோகபூர்வமாக வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு