யாழ். மக்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்:பல பகுதிகளிலும் நாளை மின்தடை

ஆசிரியர் - Admin
யாழ். மக்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்:பல பகுதிகளிலும் நாளை மின்தடை

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வடமாகாணத்தின் யாழ்.குடாநாட்டின் பல பகுதிகளில் நாளை சனிக்கிழமை(03) மின்சாரம் தடைப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாளை(03) காலை-07.30 மணி முதல் மாலை-06 மணி வரை யாழ். குடாநாட்டின் குப்பிளான், ஏழாலை, கட்டுவன், ஊரெழு, புன்னாலைக்கட்டுவன், குரும்பசிட்டி, வயாவிளான், ஈவினை,உரும்பிராய், விளாத்தியடி லேன், உரும்பிராய் மானிப்பாய் வீதி, அங்கிலிப்பாய், சுன்னாகம் சிவன் கோவிலடி பிரதேசம், சுன்னாகம் இலங்கை தொலைத்தொடர்பு நிலையம்,  வாகையடி, அச்செழு, மாசுவன் சந்தி, புன்னாலைக்கட்டுவன் வடக்கு விக்கிரமரட்ண பிறேவேற் லிமிற்றெட், சூராவத்தை, மயிலங்காடு, பருத்தித்துறை நகரம், சாரையடி, கிராமக்கோடு, கல்லூரி வீதி, தம்பசிட்டி, சாளம்பை, வல்லிபுரம், உபாயகதிர்காமம், புனிதநகர், கற்கோவளம், மாதணை, நெல்லண்டை, பருத்தித்துறை வெளிச்சவீடு, சிவப்பிரகாசம் வீதி, 3 ஆம் குறுக்குத் தெரு மற்றும் 4 ஆம் குறுக்குத் தெருப் பிரதேசம், கற்கோவளம் ஐஸ் தொழிற்சாலை, பொன்னாலை கூல்மென் ஐஸ் தொழிற்சாலை, வலந்தலைச் சந்தி, சிவகாமி அம்மன் கோவிலடி, மருதபுரம், வியாவில், கருங்காலி, காரைநகர்ச் சிவன் கோவிலடி, பொன்னாலை கிருஷ்ணன் கோவிலடி ,பொன்னாலை வீட்டுத் திட்டம் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு