அரசியல் கைதிகளின் வழக்கு வவுனியா மேல் நீதிமன்றக்கு மாற்றப்பட்டது

ஆசிரியர் - Editor II
அரசியல் கைதிகளின் வழக்கு வவுனியா மேல் நீதிமன்றக்கு மாற்றப்பட்டது

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் கைதிகளின் வழக்குகள் மீள வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டுள்ளது. வவுனியா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த மதியரசன் சுலக்சன், கணேசன் தர்சன் மற்றும் இராசதுரை திருவருள் ஆகிய மூன்று அரசியல் கைதிகளினதும் வழக்கு விசாரணைகள் வவுனியா மேல் நீதிமன்றில் இருந்து அநுராதபுரம் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதை எதிர்த்து தொடர் உணவுதவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.

அவர்களின் வழக்குகளை சட்டமாஅதிபர் திணைக்களம் திடீரென அநுராதபுரம் நீதிமன்றுக்கு மாற்றியமைக்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றில் மீளாய்வு மனு அரசியல் கைதிகள் சார்பில் கடந்த செப்ரம்பர் மாதம் 26 ஆம் திகதி தாக்கல் செய்திருந்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு