யாழ்.பல்கலைகழக மருத்துவ பீட மாணவி கொலையில் புதிய திருப்பம்..! கொலையாளி காதலன் அல்ல கணவன்..

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைகழக மருத்துவ பீட மாணவி கொலையில் புதிய திருப்பம்..! கொலையாளி காதலன் அல்ல கணவன்..

யாழ்.பல்கலைகழக மருத்துவபீட மாணவி கழுத்தறுத்து கொலை செய்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கொலையாளியான இராணுவ சிப்பாய் பெண்ணின் காதலி அல்ல கணவன் என தகவல் புதிய தகவல் வெளியாகியிருக்கின்றது.

அவரை கொன்ற இராணுவச்சிப்பாய், அவரது காதலியென முன்னர் செய்தி வெளியான போதிலும், கொல்லப்பட்டவரின் கணவனே அந்த சிப்பாயாவார். அவரது கணவனாகிய களுத்துறையை சேர்ந்த எரங்க திலீப்குமார (30) என்பவர், 

கொலை செய்து விட்டு தப்பியோடிய போது மடக்கிப்பிடிக்கப்பட்டு, தற்போது யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகிறார். அவர் பரந்தனில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றுகிறார். 

கொலையை செய்து விட்டு, சாகவாசமாக நடந்து சென்று, அங்குள்ள குடிநீர் குழாயில் முகத்தை கழுவிவிட்டு அவர் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இருவருக்கும் திருமணமாகி 3 வருடங்களாகிறது. அண்மைக்காலமாக ஏற்பட்ட குடும்ப பிரச்சனையே கொலையில் முடிந்துள்ளதாக தெரிகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு