யாழில் முதியவரின் உயிரைப் பறித்த பணிஸ்
பணிஸும் பிளேன்ரியும் உட்கொண்ட முதியவரின் தொண்டையில் அவை சிக்கியதால் உயிரிழந்தார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் டேவிட் வீதியில் உள்ள அவரது வீட்டில் நேற்று நடந்தது.இதே இடத்தைச் சேர்ந்த செலஸ்ரின் பெஞ்சமின் (வயது-83) என்பவரே உயிரிழந்தார்.
உணவு உட்கொண்டபோது அவர் மயங்கியுள்ளார். உடனடியாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
எனினும் அவர் முன்னரே உயிரிழந்து விட்டமை மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. அவர் ஏற்கனவே இதய நோய் மற்றும் சளி என்பனவற்றால் பாதிக்கப்பட்டிருந்தார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் விசாரணை நடத்தினார். சடலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.