பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் யாழ்ப்பாணத்தில் மஹிந்த.. -

ஆசிரியர் - Editor II
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் யாழ்ப்பாணத்தில் மஹிந்த.. -

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சற்று முன் யாழ். வீரசிங்க மண்டபத்தை சென்றடைந்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து வீரசிங்க மண்டபத்தில் நடைபெறவுள்ள தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகவே இன்று யாழ் சென்றுள்ளார்.

இதன்போது மஹிந்தவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஊடகவியலாளர்கள், பொது மக்கள் என அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த பின் மஹிந்த வடக்கிற்கு செல்லவில்லை. இந்த நிலையில் 3 வருடங்கள் கழித்து தேர்தல் பிரச்சாரத்திற்காக யாழ். சென்றுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு