யாழில் மர்மமான முறையில் இளம்பெண் மரணம் - அதிர்ச்சியில் குடும்பம்

ஆசிரியர் - Editor II
யாழில் மர்மமான முறையில் இளம்பெண் மரணம் - அதிர்ச்சியில் குடும்பம்

யாழ்ப்பாணத்தில் திருமணமான இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

மாதகல் பகுதியை சேர்ந்த 22 வயதான அன்டன் உதயராஜா டிலக்ஸி என்பவரே உயிரிழந்துள்ளர்.

சம்பவம் இடம்பெற்ற தினமான இன்று காலை, தனது கணவரும் பெற்றோரும் கோயிலுக்குச் சென்றிருந்த சமயம் இவர் மட்டும் வீட்டில் தனித்திருந்துள்ளார்.

வெளியே சென்றிருந்தவர்கள் வீடு வந்து பார்த்தபோது, டிலக்ஸி இரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வீட்டிலிருந்து பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ள நிலையில். கொள்ளையர்களால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு