பிறந்து 2 மணித்தியாலங்களில் சிசு மரணம்

ஆசிரியர் - Admin
பிறந்து 2 மணித்தியாலங்களில் சிசு மரணம்

யாழ்ப்பாதணத்தில் பிறந்து இரண்டே மணித்தியாலங்களான சிசுவொன்று சுவாசப் பிரச்சினை காரணமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

மல்லாகம் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் கல்ப்பனா என்பவருக்கு நேற்று மாலை 6 மணியளவில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

இருந்தபோதிலும் குறித்த குழந்தையானது சுவாசிக்க முடியாது கஸ்ரப்பட்டதையடுத்து உடனடியாக இரவு 8 மணியளவில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பட்டிருந்தது.

இருந்தபோதிலும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் போதே குறித்த குழந்தை உயிரிழந்துவிட்டதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரவித்துள்ளன.

இதனை தொடர்ந்து குறித்த மரணம் தொடர்பாக தீடிர் மரண விசாரணை அதிகாரி விசாரனைகளை மேற்கொண்டதையடுத்து சிசுவின் சடலமானது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு